Sunday 22 May 2011

மனம் உடைந்த கலைஞர்...ராசா ஒப்புதல் வாக்குமூலம்..?

மனம் உடைந்த கலைஞர்...ராசா ஒப்புதல் வாக்குமூலம்..?

கலைஞரின் நம்பிக்கை நாளுக்கு நாள் அவருக்கே தளர்ந்து வருகிறது..காரணம் அண்ணா துவங்கிய தி.மு.க எனும் மாபெரும் கட்சியின் பெருமைமிகு கொள்கைபரப்பு செயலாளர் ராசா இப்போது இருப்பது சிறைச்சாலையில்....

இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவார் பாருங்க என நெஞ்சுரம் காட்டிய தொண்டர்கள் கூட சிபிஐ நாளுக்கு நாள் நெருக்கி வருவதை கண்டு எச்சில் முழுங்கி நடுங்கி கிடக்கிறார்கள்..


இருக்காத..பின்னே ...ராசாவின் அல்லக்கைகள் கைது செய்யப்பட்டவுடன் எல்லா உண்மைகளையும் கக்கிய பிறகு..ராசா மட்டும் சட்டத்தின் படியே நடந்துகொண்டேன்..என்பதையே வெவ்வேறு குரல்களில் சொன்னால்....? சிபிஐ நமட்டு சிரிப்புடன் இவ்வளவு க்கும் மேலயௌம் சமாளிக்கிறாரே என விசாரணையை ஆயிரக்கணக்கான கேள்விகளுடன் சிறிதும் சோர்ந்து விடாமல் ....கேள்வி கேட்டே கொலையாய் கொல்கிறார்களாம்

இன்னும் அஞ்சு நாள் வேணும்..இவர் இன்னும் கெத்தாவே இருக்க்றாரு..என வாதாடி தங்கள் கஸ்டடியில் இன்று மீண்டும் ராசாவை தள்ளிக்கொண்டு போனது சிபிஐ...பலியாடு மீண்டும் தெம்போடு அவர்களுடன் சென்றுள்ளது...

தலைவர் தன்னை கைவிடமாட்டார்...என தெம்போடு இருக்காராம் ராசா...பாவம் அவருக்கு தெரியாது ..அவரது தலைவர் ,பெரியார்,அண்ணா,எம்,ஜி,ஆர்,தன் கட்சி தொண்டர்கள் எல்லோருக்கும் பெப்பே காட்டியவர் என்று....இந்த சின்ன ராசாவுக்கா அசருவார்?

கனிமொழிக்கு ஆபத்து வந்து விடக்கூடாதே என்ற பதைபதைப்பில் 14 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சொன்ன வார்த்தையான ’’ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே குற்றவாளி ஆகிவிட மாட்டார் ’’என்ற பொன்மொழியை இன்று திருப்பி போட்டுள்ள கலைஞர் ,தேர்தல் முடிந்ததும் முடிவு எப்படி இருப்பினும் ராசாவிடம் வாங்கிய வாக்குமூலம் மூலம் நெருக்கடி அதிகமாகுமே தவிர முற்றிலும் நீங்காது என மன அளவில் உடைந்து போய்தான் இருக்கிறார்.

No comments:

Post a Comment

VMware Cloud Learning Video's

Here is a nice summary list of all VMworld US 2018 Breakout session with the respective video playback & download URLs. Enjoy! Bra...